Home விளையாட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் முடிவுகள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது : ஷம்மி சில்வா

இலங்கை கிரிக்கெட் அணியின் முடிவுகள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது : ஷம்மி சில்வா

0

இந்த ஆண்டு உலககிண்ணத் தொடரில் இலங்கை (Sri Lanka) அணி எடுத்த முடிவுகள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா (Shammi Silva) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கொழும்பில் (Colombo) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமாக விளையாடியதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதிப்பற்றாக்குறை

அத்தோடு, தான் அந்த இடத்தில் இருந்திருந்தால் இது போன்ற முடிவுகளை தவிர்த்திருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆடுகளத்தின் புரிதல் இலங்கை அணிக்கு குறைவாக இருந்ததாகவும் மற்றும் கடந்த காலத்தில் இலங்கை கிரிக்கெட் சபை நிதிப்பற்றாக்குறைகளை எதிர்கொண்டதாகவும் தற்போது அதிக வருவாய் உழைக்கும் முன்னணி கிரிக்கெட் சபைகளில் இலங்கை கிரிக்கெட் சபை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sri-lankan-world-cup-team-results-this-year-issues-1719039464

NO COMMENTS

Exit mobile version