Home இலங்கை சமூகம் அரச நிறுவனங்களில் கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை

அரச நிறுவனங்களில் கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை

0

தற்போது கைரேகை ஸ்கேனர் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை ஸ்கேனர்களை
நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

பல அரச அலுவலகங்களில் ஏற்கனவே கைரேகை ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், பல
நிறுவனங்கள் இன்னும் இந்த முறையைப் பின்பற்றவில்லை என அமைச்சர் பேராசிரியர்
ஏ.எச்.எம்.எச். அபயரத்ன கூறினார்.

இதுபோன்ற எல்லா இடங்களிலும் ஸ்கேனர்கள் அறிமுகப்படுத்தப்படுவதை அரசாங்கம்
உறுதி செய்யும் என்றும், இது ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஒரு வசதியான
செயல்முறை என குறிப்பிட்டார்.

மேலதிக நேரக் கொடுப்பனவுகள் 

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமீபத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள்
அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கொடுப்பனவுகள் துல்லியமாக வழங்கப்படுவதை
உறுதி செய்வது மிக முக்கியமானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களுக்கு அரச நிதியில் ஊதியம் வழங்கப்படுவதால், சம்பளம் மற்றும்
மேலதிக நேரக் கொடுப்பனவுகள் முறையாகக் கணக்கிடப்பட வேண்டும் என்று அவர்
வலியுறுத்தினார்.

இந்தச் செயல்பாட்டில் துல்லியம் மற்றும் பொறுப்புணர்வைப் பேணுவதில் கைரேகை
ஸ்கேனர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அமைச்சர் அபயரத்ன மேலும் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version