முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) பற்றாக்குறையால் பல
பிரச்சினைகள் காணப்படுவதுடன் நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி
வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் (11) பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி மற்றும்
மயக்கம் ஆகிய நோய்களால் பீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதன்போது குறித்த மாணவியை மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல்
வைத்தியசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “இன்று காலை உடையார்கட்டு மத்திய கல்லூரிக்கு கல்வி கற்கச் சென்ற குறித்த மாணவி
உடல்நலக் குறைவால் பெற்றோரிடம் பாடசாலை
நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஒப்படைக்கப்பட்ட மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு
சென்றுள்ளனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக
சிகிச்சைக்காக பாடசாலை மாணவி மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை
காணப்பட்டது.
மாஞ்சோலை வைத்தியசாலைக்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்
இருந்து கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி தேவைப்பட்டதன் காரணத்தால் மாணவியும்
பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
மாஞ்சோலை வைத்தியசாலை
இதன்பின் சுமார் 3 மணி நேரத்தின் பின் மாணவியும் தந்தையும் வைத்தியசாலை வைத்தியரிடம்
சென்று தாம் காத்திருப்பதற்கான காரணத்தை கேட்ட போது, வைத்தியசாலையில்
நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதற்கு அவர் தன் சொந்த செலவில்
நோயாளர் காவு வண்டி விட வேண்டும் என மாணவியிடமும் தந்தையிடமும் வைத்தியர் முரண்பாடாக பேசியுள்ளார்.
இதன் பின் மாணவியின் தந்தை தனது சொந்த விருப்பின் பெயரில் வைத்தியசாலையில்
இருந்து மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் பல நோயாளர் காவு வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் – பு.கஜிந்தன்
https://www.youtube.com/embed/wd6sN024T5Y
