யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் அவர் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லவுள்ளார்.
இதன்படி, சுதர்சன் இன்றையதினம் (21.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான இடமாற்ற விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
கடமை பொறுப்பேற்பு
இவர் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி இன்றையதினம்
(22.10.2025) வடக்கு மாகாண சபையில் தமது கடமையினை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
