Home சினிமா அடுத்த படத்தை அறிவித்த சூர்யா.. தெலுங்கு இயக்குனர், ஹைதராபாத்தில் தான் முழு ஷூட்டிங்

அடுத்த படத்தை அறிவித்த சூர்யா.. தெலுங்கு இயக்குனர், ஹைதராபாத்தில் தான் முழு ஷூட்டிங்

0

நடிகர் சூர்யா அடுத்து ரெட்ரோ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மே 1ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில் தற்போது படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணிகளில் தீவிரமாக படக்குழு இறங்கி இருக்கிறது.

இன்று ஹைதராபாத்தில் ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கலந்துகொண்டார்.

அடுத்த படம்

அந்த விழா மேடையில் பேசும்போதே சூர்யா தனது அடுத்த படத்தை அறிவித்தார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தான் அடுத்து நடிக்கப்போவதாக கூறிய அவர், அதன் ஷூட்டிங் வரும் மே மாதம் ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது எனவும் கூறினார்.

சித்தாரா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க போகிறது.
 

Source: https://cineulagam.com/article/suriya-next-film-with-venki-atluri-1745690483

NO COMMENTS

Exit mobile version