ராகினி எம்எம்எஸ்
பாலிவுட்டில் கடந்த 2011ம் ஆண்டு இயக்குனர் பவன் கிர்பலானி இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் ராகினி எம்எம்எஸ். இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2014ல் வெளிவந்தது. இப்படத்தை பூஷன் படேல் இயக்கியிருந்தார். இதில் சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.
தமன்னா
இந்த நிலையில், தற்போது உருவாகும் ராகினி எம்.எம்.எஸ் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிகை தமன்னா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளர் ஏக்நாத் கபூர் தெரிவித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் இப்படத்தை எடுக்கின்றனர்.
நடிகை தமன்னாவுக்கு ரூ. 6 கோடி சம்பளம் வழங்கிய கர்நாடகா அரசு.. காரணம் என்ன தெரியுமா
இந்த படங்களில் எல்லைமீறும் கவர்ச்சியான காட்சிகளில் சன்னி லியோன் நடித்திருந்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதே போல் மூன்றாம் பாகத்தில் தமன்னாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்க இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
தமன்னா தற்போது ரோமியோ, ரேஞ்சர், ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம், Vvan: Force of the Forrest ஆகிய நான்கு ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
