Home இலங்கை சமூகம் டித்வா சூறாவளி… திருகோணமலை அருகே மையம்: கனமழை – பலத்த காற்று எச்சரிக்கை

டித்வா சூறாவளி… திருகோணமலை அருகே மையம்: கனமழை – பலத்த காற்று எச்சரிக்கை

0

டித்வா சூறாவளி தற்போது திருகோணமலைக்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு வடமேற்கே நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் அடுத்த பல மணிநேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவின் பல பகுதிகளில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்றும் மற்றும் சில நேரங்களில் மணிக்கு 80 தொடக்கம் 90 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version