Home இலங்கை சமூகம் யாழில் பரிதாபமாக பலியான சிறுவன்…!

யாழில் பரிதாபமாக பலியான சிறுவன்…!

0

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த பிரதீபன்
டக்சிகன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 22 ஆம் திகதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  

காய்ச்சலை குணப்படுத்த
தாயார் கை வைத்தியம் செய்துள்ளார்.

இதையடுத்து, காய்ச்சல் வீரியமான நிலையில் 25 ஆம்
திகதி சிறுவனை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில், எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக
உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version