Home இலங்கை சமூகம் ரணிலின் விளக்கமறியல் – குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்

ரணிலின் விளக்கமறியல் – குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க இன்று (22) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்த நிலையில் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்  கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version