Home இலங்கை சமூகம் யாழில் கொடூர கொலை : சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி!

யாழில் கொடூர கொலை : சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி!

0

யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கற்கோவளம் –
புனிதநகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இன்று (30) காலை இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை காவல்துறையினர்

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து
சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை
நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

50 மற்றும் 51வயதான இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான குறித்த தம்பதியர் மிகவும் கொடூரமான முறையில் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை
செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு
பின்னரே சடலங்களை மீட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/the-couple-murdered-in-point-pedro-jaffna-1730275216

NO COMMENTS

Exit mobile version