Home இலங்கை சமூகம் தமிழ் மக்களின் காணி விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு: வடக்கு ஆளுநர் விளக்கம்

தமிழ் மக்களின் காணி விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு: வடக்கு ஆளுநர் விளக்கம்

0

தமிழ் மக்களின் காணி விவகாரத்தில் அரசாங்கம் நேரான சிந்தனையிலேயே இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று(05.02.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக
நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும்
திணிப்பதற்கும் நான் தயாரில்லை.

நேரான சிந்தனையில் அரசாங்கம்

இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ்
மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான
நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன்.

அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக
காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version