Home இலங்கை பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

0

பிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (17) பிரித்தானியா உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காலை 11 மணிக்கு பண்ணிசை அணிவகுப்புடன் மாவீரர் குடும்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளனர்.

குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

இதையடுத்து, உலகத் தமிழர் வரலாற்று மையவளாகத்தில் உணர்வு பூர்வமாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிகழ்வானது மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/the-knights-family-tribute-event-in-britain-1731847967

NO COMMENTS

Exit mobile version