யாழ்ப்பாணம் வடமராட்சி மண்டான் உப்பு வீதி பகுதியில் தமிழ் நாடு விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பனை விதைகளை நாட்டிவைத்தார்.
வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் ஏற்பாட்டில்
இடம் பெற்ற மரம் நடுகை மாதத்தில் இன்றைய தினம் குறித்த பனம் விதை நடுகை
இடம்பெற்றது.
இதில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மதுவருந்த திணைக்களம்
அதிகாரிகள், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,
பணியாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு பனம் விதைகளை
நாட்டி வைத்தனர்.
