Home இலங்கை சமூகம் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

0

இலங்கை அரசுக்கும் இஸ்ரேல் (Israel) அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் 2447 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாய வேலைகளுக்காக இஸ்ரேல் சென்றுள்ளனர்.

இதேவேளை, விவசாய கைத்தொழில் துறையில் வேலைகளுக்கு தகுதி பெற்ற மேலும் 61 இலங்கையர்களுக்கு விமான பற்றுச்சீட்டு வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழு இஸ்ரேலிய விவசாய தொழில்துறை தொழிலாளர்களின் 53 மற்றும் 54 வது தொகுதி ஆகும்.

இலங்கையர்களின் பாதுகாப்பு

அவர்களில் 13 பேர் இம்மாதம் 30 ஆம் திகதி இஸ்ரேலுக்கு புறப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் நவம்பர் 6 மற்றும் 16 ஆம் திகதிகளில் புறப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்தோடு, இந்த நாட்களில் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை என இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version