யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் 15 போதை மாத்திரைகள் மற்றும் 50
மில்லிகிராம் ஹெரோயின் போன்றவற்றுடன் 18,19 மற்றும் 21 வயதுடைய சந்தேகநபர்கள்
மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(15.09.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய
போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள்
விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
