புத்தளம் பகுதியில் சுமார் 1 கோடி ரூபா 30 இலட்சம்
ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 3 கஜமுத்துக்களுடன் மூவர் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (16) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கஜமுத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப்
பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விஷேட
அதிரடிப்படையினருடன் இனைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கைகள்
குறித்த சுற்றிவளைப்பு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக
இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது 1கோடி 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட 3 கஜமுத்துக்கள்
கைப்பற்றப்பட்டுள்ள்ளன.
புத்தளம் மற்றும் மாவனெல்ல பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களையும் மேலதிக
நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Source: https://tamilwin.com/article/three-arrested-puttalam-gems-worth-crores-rupees-1723875296
