யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 200 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கேரள கஞ்சா இருப்பதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நெல்லியடி பொலிஸாரால் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டது.
இதன்போது கேரள கஞ்சாவுடன் இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
