Home இலங்கை குற்றம் வெளிநாட்டிலிருந்து வந்த மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டிலிருந்து வந்த மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று பயணிகளை விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

36 ஐபோன்கள் மற்றும் 06 மடிக்கணினிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வந்து தீர்வை வரி செலுத்தாமல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்ற மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் 40-45 வயதுக்கு இடைப்பட்ட வர்த்தகர்கள் மூவர் என தெரியவந்துள்ளது.

கையடக்க தொலைபேசிகள்

விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது, ​​அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுங்கத்துறை இணை இயக்குனர், சுங்கச்சாவடி சோதனை நடத்தி கையிருப்பு மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்து மூவருக்கும் 16 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/three-person-arrest-in-katunayake-airport-today-1723353441

NO COMMENTS

Exit mobile version