Home இலங்கை குற்றம் யாழ். நகரில் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது

யாழ். நகரில் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது

0

யாழ். நகரில் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை 

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த
ரகசிய தகவலின் அடிப்படையில் 20 போதை மாத்திரைகளுடன் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 17 மற்றும் 18 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version