இலங்கை TID பிரிவினரால் விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைப்பதை தவிர்த்து எமது பொலிஸ்மா அதிபர் ஒவ்வொரு விசாரணைகளையும் எமது மாவட்டத்திலே செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராஜா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (28.12.2024) ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், TID பிரிவினரால் ஒன்பதாவது முறையாக கொழும்பு நான்காம் மாடிக்கு
அழைக்கப்பட்டு கட்டளை தரப்பட்டது.26, 27 ஆம் திகதிகளில் என்னை கொழும்புக்கு வருமாறு அழைத்தார்கள்.
TID விசாரணைகள்
சுகவீனம் காரணமாக நான் கலந்து கொள்ளவில்லை.உண்மையாகவே என்னை போன்று
எத்தனையோ தரப்புக்கு கொழும்புக்கு அழைப்பானை வருகிறது.
ஒரு நபர் வந்து போக
மொத்தத்தில் 25 ஆயிரம் ரூபாய் தேவை.ஆகவே இதை கருத்தில் கொண்டு வந்து எமது
பொலிஸ்மா அதிபர் ஒவ்வொரு விசாரணைகளையும் எமது மாவட்டத்திலே செய்யுமாறு
மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படியான அழைப்பு கட்டளைகளால்
புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகள் இந்த நாட்டுக்கு வருவது குறைந்து வருகிறது. உண்மையாகவே இலங்கை தீவு ஒரு சுற்றுலா துறையை நம்பி இருக்கிறது.
தற்பொழுது
நடைபெறுகின்ற இப்படியான TID விசாரணைகள் தொடர்பான தகவல்கள் வெளிவரும் போது
இந்த நாட்டுக்கு சுற்றுலா துறையினர் வருவது குறைந்து விடும்.
பொதுவாக ஒரு
முகநூலில் தேசிய தலைவரின் படம் வந்தால் அவர்களுக்கு விசாரணை ஒட்டுமொத்தத்தில்
தமிழர்கள் ஒரு மூடிய சிறைச்சாலையில் தான் வாழ்கிறார்கள்.
தமிழ் இளைஞர்கள் விசாரணை
இப்பொழுது புதிய ஜனாதிபதி
ஆட்சிக்கு வர முதல் பயங்கரவாத சட்டத்தை எதிர்த்த ஒரு நபர். இன்று அந்த ஆட்சி
பீடத்தில் எழுதிவிட்டு பழைய முறைகளை தான் அவரும் செய்கிறார். அவர்
ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான தமிழ் இளைஞர்கள் விசாரணை என்ற போர்வையில்
பயமுறுத்தப்படுகிறார்கள்.
ஆகவே இந்த நிலை தொடருமாக இருந்தால் இளைஞர்கள்
எல்லோரும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பிரச்சினை
இன்னும் தீரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எமது நாட்டில் கதைப்பதற்கு
மட்டும்தான் தொலைபேசி பாவிக்கலாம் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் ஒன்றும்
பிரச்சினை இல்லை.
அதை முதலில் இந்த ஜனாதிபதி செய்தால் நன்றாக இருக்கும். இது ஒரு
ஜனநாயக நாடு கிடையாது ஒரு ஜனநாயகமாக பேச முடியாது. ஒரு ஜனநாயகமாக ஒரு பதிவிட
முடியாது.
அப்படித்தான் நமது மக்கள் எமது இளைஞர்கள் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.இதற்கு ஒரு நல்ல தீர்வினை தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
