Home இலங்கை குற்றம் யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதி கைது

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதி கைது

0

நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி
சென்ற கனரக வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை
கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அரசடி வீதி ஊடாக மண்ணுடன் சென்ற கனரக வாகனம் ஒன்றினை பொலிஸார் மடக்கி
சோதனை செய்தனர்.

இதன்போது, அனுமதி பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மணலை ஏற்றி
செல்வதனை பொலிஸார் கண்டறிந்தனர்.

கைது

இதனையடுத்து, சாரதியை கைது செய்த பொலிஸார் கனரக வாகனத்தையும் மணலுடன்
மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version