Home இலங்கை குற்றம் சிஐடி இல் முன்னிலையான டிரான் அலஸ்

சிஐடி இல் முன்னிலையான டிரான் அலஸ்

0

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alies) சற்று நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக டிரான் அலஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில்..

சம்பவம் தொடர்பான தகவல்களை முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் அறிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே, இந்த சம்பவம் தொடர்பாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version