சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, விரைவான நிதிக் கருவியின் கீழ் இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு நேற்று (19) கூடி, தொடர்புடைய நிதி வசதியை வழங்க தீர்மானித்துள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்காக, இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி வசதியைக் கோரியுள்ளது.
நிதி வசதி கோரிக்கை
அதன்படி, நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான நிதி கடன் வசதிக்கு கூடுதலாக இந்த நிதி வசதி வழங்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5ஆவது மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது.
மேலும், அதை அங்கீகரிக்க டிசம்பர் 15ஆம் திகதி அன்று நிர்வாகக் குழு கூட திட்டமிடப்பட்டிருந்தாலும், இந்த விரைவான நிதி வசதிக்கான கோரிக்கை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதிய பணிக்குழு இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
