Home இலங்கை சமூகம் யாழில் இன்று மாலை கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

யாழில் இன்று மாலை கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

0

யாழ்ப்பாணம் – பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் இன்று(07) மாலை
உயிரிழந்தனர்.

யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இருவரே உயிரிழந்தவர்களாவர்.

பண்ணை கடலில் நீந்த சென்ற நால்வர் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த
அப்பகுதியில் நின்றவர்கள் நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

இதன்போது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

NO COMMENTS

Exit mobile version