சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவிலக்கண்டி பகுதியில்
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (26) சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணைகள்
இதன்போது, மணல் அகழ்வுக்குப் பயன்படுத்திய உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் விசாரணைகளின்
பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
