Home இலங்கை குற்றம் சுதுமலையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

சுதுமலையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது
செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த
புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த
குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார்
சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இருவகையிலான 1600 போதை மாத்திரைகள்

இதன்போது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து கொக்காவில் பகுதியில் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க
இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைதானவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version