Home இலங்கை குற்றம் வடக்கு கடலில் பெருந்தொகை கேரள கஞ்வாவுடன் இருவர் கைது

வடக்கு கடலில் பெருந்தொகை கேரள கஞ்வாவுடன் இருவர் கைது

0

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,185 கிலோகிராம் 600 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (30.10.2025) இடம்பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25
மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்த மதிப்பு

மேலும், சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும்
டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல்
நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நாற்பத்தொரு மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும்
என்று நம்பப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version