Home இலங்கை சமூகம் மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் இருவர்

மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் இருவர்

0

இலங்கை மத்திய வங்கியின் புதிய துணை ஆளுநர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சந்திரநாத் அமரசேகர மற்றும் கே.ஜி.பி. சிறிகுமாரா ஆகியோரையே நிதி அமைச்சகம்
துணை ஆளுநர்களாக நியமித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி

2023 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கிச் சட்ட விதிகளின்படி, மத்திய வங்கியின்
நிர்வாகக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டதாக
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரசேகர இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மத்திய வங்கியில் பணியாற்றியுள்ளார்,
சிறிகுமார மத்திய வங்கியில் நாணய மேலாண்மை, பொதுக் கடன், வைப்புத்தொகை
காப்பீடு, நிதித்துறை தீர்வு மற்றும் பெருநிறுவன சேவைகள் உள்ளிட்ட துறைகளில்
25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version