Home இலங்கை குற்றம் யாழில் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

யாழில் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

0

யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியில் யாழ்ப்பாணம் போதைபொருள் தடுப்பு பிரிவினரால்
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் இரகசிய அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 539 மில்லி கிராம் ஹெரோயின்
கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும்
21 வயதுடைய இளைஞர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version