நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டாரவிடம் இருந்த ஒரு துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் சட்டப்பூர்வ தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.
நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியின் போது அவர் இந்த துப்பாக்கியை வைத்திருந்ததைக் காட்டும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
