புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள்,பரல் என்பன இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பாெலிஸார் இன்றைய தினம் (05.11.2025) காலை தேவிபுரம் பகுதியில் மேற்காெண்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பாெலிஸார் விசாரணை
இதன்பாேது கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லி லீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில், கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் பொலிஸாரின் வருகையை உணர்ந்து தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர்களை தேடி வருவதாகவும், குறித்த சம்பவம் தாெடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
