Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதிக்கான அனுமதி! பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

வாகன இறக்குமதிக்கான அனுமதி! பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

0

வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் கணிசமான அதிகரிப்பைக் காணமுடிந்துள்ளது.

நேற்றைய தினம் அனைத்து பங்குகளும் 156.4 வீதத்தினால் பெறுமதி அதிகரிப்பை காட்டியுள்ளன. அதன் பிரகாரம் சுட்டியொன்றின் பெறுமதி 14,810 ஆகும்.

வாகன இறக்குமதிக்கான அனுமதி

கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இருந்து கொழும்பு பங்குச் சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது.

அண்மையில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையொன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக பங்குச் சந்தை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Source: https://tamilwin.com/article/vehicle-imports-sri-lanka-1734746661

NO COMMENTS

Exit mobile version