Home இலங்கை சமூகம் வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்

வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்

0

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது இந்த நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இது தொடர்பில் மேலும் கூறுகையில்,  

இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வாகன இலக்கத்தை வழங்க நடவடிக்கை

புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள் வழங்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாகன இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு அந்த இலக்கத்தை பிரதி செய்து, வாகனத்தில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version