வ/நெளுக்குளம் கலைமகள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது தற்காலிக இணைப்பு காலம்
முடிவடைந்தும் மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறி தற்காலிக
இணைப்பு பாடசாலையிலேயே தொடர்சியாக அறிக்கையிட்டு வருகின்றமை தொடபில் இலங்கை
ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆசிரியர் சங்க கடிதம்
2023 நவம்பர் மாதம் இவரின் இணைப்பு நிறைவடைந்தும் நிரந்தர வலயம் திரும்பாத
இவருக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்க
வவுனியா மாவட்ட தலைவர் வடக்கு கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளார்.
குறித்த கடிதத்தின் பிரதி ஆளுநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
