Home இலங்கை சமூகம் ஹோர்டன் சமவெளிக்கு வருவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஹோர்டன் சமவெளிக்கு வருவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

ஹோர்டன் சமவெளியில் சட்டவிரோத செயல்கள் குறித்து எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் அரிய ‘நெலு’ மலரைப் பார்க்க வரும்
பார்வையாளர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்து வரும் நிலையில், பலர் பூங்கா
விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகள் குற்றம் சுமதியுள்ளனர்.

சுமார் 50 பேருக்கு அபராதம் 

இந்த நிலையில், பூங்கா விதிகளை மீறுபவர்கள், ஒதுக்க்கப்பட்ட பாதைகளில் இருந்து
விலகிச் செல்வவர்கள் அல்லது பூங்காவின் தாவரங்கள் மற்றும் பல்லுயிர்
பெருக்கத்திற்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என
பூங்காவின் கண்காணிப்பாளர் சிசிர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு தேசிய பூங்காவில், பார்வையாளர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை
பார்வையிட மாத்திரமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் பாதையை விட்டு வெளியேறுதல், பூக்களைப் பறித்தல் அல்லது விலங்குகளுக்கு
உணவளித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என சிசிர
ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும், சுமார் 50 பேருக்கு அபராதம்
விதித்துள்ளதாக சிசிர ரத்நாயக்க கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version