Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

0

கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இனங்காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ9 வீதியின் தட்டுவன் கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (14) காலை காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version