Home இலங்கை குற்றம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாய்: மகன், மகள் மற்றும் மருமகள் கைது

கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாய்: மகன், மகள் மற்றும் மருமகள் கைது

0

மொனராகலையில் வீடொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத அறை

எனினும் கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயது மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version