Home இலங்கை சமூகம் திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

0

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று(17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் வயது (24) உடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

குறித்த சடலம் கந்தளாய் வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம்
பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version