Home இலங்கை சமூகம் வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி – திடீரென உயிரிழப்பு

வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி – திடீரென உயிரிழப்பு

0

இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதியின் உயிரிழப்பானது அந்தப் பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனி கங்கையின் ராணியாக முடிசூட்டப்பட்ட சேதவத்தை, கோட்விலாவைச் சேர்ந்த யுவதியான ஓஷாதி வியாமா என்பவரே நேற்று (11) இவ்வாறு உயிரிந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம்

எனினும் குறித்த யுவதியின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 19 வயதான இந்த யுவதி சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அயல் வீட்டு மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல, இரவுபகலாக படகில் பணியாற்றி, பெரிய தியாகத்தை செய்ததாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.

தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்ட ஓஷாதி தனது 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீற்றர் நீந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இதேவேளை ஓஷாதியின் சாதனையை காண கிராமவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அன்றையதினம் களனி ஆற்றின் இருபுறமும் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version