Home இலங்கை குற்றம் யாழில் போதைப்பொருள் கலந்த மாவாவுடன் இளைஞன் கைது

யாழில் போதைப்பொருள் கலந்த மாவாவுடன் இளைஞன் கைது

0

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா
கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம்
கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version