Home இலங்கை குற்றம் யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

0

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இன்றையதினம்(11) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

மேலதிக விசாரணை

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 5 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version