Home முக்கியச் செய்திகள் யாழில் ஆலயத்திற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் ஆலயத்திற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

0

யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய செல்வச்சந்திரன் மிரோஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞர் நேற்றிரவு (29) அயலில் உள்ள ஆலயத்தில் இசை நிகழ்வை பார்வையிட சென்றுள்ளார்.

இசை நிகழ்விற்கு சென்ற மகன் திரும்பி வராத காரணத்தால் தாயார் இன்று காலை 5 மணியளவில் தேடிச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த இளைஞர் வீட்டு
ஒழுங்கைக்குள் அசைவற்று காணப்பட்ட நிலையில், உடனே புத்தூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனை

பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

இதனைதொடர்ந்து, பாம்பு தீண்டியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version