Home இலங்கை அனோஜன் சிவராசா விவகாரம் அவசர நடவடிக்கைக்கு ரிஷாட் பதியுதீன் உறுதி

அனோஜன் சிவராசா விவகாரம் அவசர நடவடிக்கைக்கு ரிஷாட் பதியுதீன் உறுதி

0
image

சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். 

இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன், அனோஜன் சிவராசாவுக்கு சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். 

இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளனர். 

அதை வேளை அனோஜனின் மற்றும் பெற்றோர் குடும்பத்தினர் அனுஜனின் விடுதலை தொடர்பில் கொண்டிருக்கின்ற அதே உணர்வுடன் தாங்களும் முஸ்லிம் சமூகமும் இருப்பதாகவும் இதன் போது அவர்களிடத்தில் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 

இதேவேளை சக பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,சாணக்கியன் ராசமணிக்கும் மனோ கணேசன் ஆகியோர் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குழுவாக அனோஜனின் விடயம் தொடர்பில் ஆரோக்கியமான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார். 

அனோஜன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பில் மரணதண்டணை தீர்ப்பு தனக்கு வழங்கப்பட்டதாக, அவர் கூறியதாகவும் தெரியவருகின்றது.

Source: https://samugammedia.com/anojan-sivarasa-issue-rishad-bathiudeen-pledges-urgent-action-1789794353

NO COMMENTS

Exit mobile version