அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் மக்கள் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் 22ஆம் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இறைமை, அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புடன் நேரடியாக தொடர்புபட்ட விடயங்களில் மக்களின் நேரடி கருத்தை அறிந்துகொள்வது அவசியம் என தமிழரசுக் கட்சி கருதுகிறது.
அந்த வகையில், அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதுடன் மட்டுப்படுத்தாமல், மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்வைக்க வேண்டும் என கட்சியின் அரசியல் குழு வலியுறுத்தியுள்ளது.
