கடந்த சில தினங்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு காரணமாக பல பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் வட்ட வளை நகரத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இடமே மௌஞ்ஜீன் தோட்டம் ஆகும் இத் தோட்டம் ஜன வசம பெருந்தொட்ட சபைக்கு சொந்தமான சுமார் 350 குடும்பங்கள் வாழும் ஒரு பகுதியாகும்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மௌஞ்ஜீன் புகையிரத நிலைய அலுவலகம் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மௌஞ்ஜீன் தோட்டத்துக்கு செல்லும் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மண் திட்டுக்கள் சரிந்து விழுந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு தற்போது தோட்ட நிர்வாகத்தினால் மண் திட்டுக்கள் அகற்றும் பணி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்று பகுதி அளவில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் சேதமாகி மூன்று குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தோட்ட ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டு தற்பொழுது வீடு திரும்பியுள்ளனர்.
இருந்த போதிலும் மீண்டும் தொடர் மழை பெய்யும் பட்சத்தில் பாதித்த பட்ட மூன்று குடும்பங்களும் மீண்டும் மீண்டும் ஆலயத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்படும் ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
