இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 84,000-ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
84,091 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நேற்று (29) எவ்வித டெங்கு மரணங்களும் பதிவாகவில்லை என்பதுடன், இதுவரை சம்பவித்துள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 61 ஆகும்.
அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 17,850 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாவது அதிகளவிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 16,716 ஆகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைவாக, இந்த ஆண்டில் இதுவரை மேல் மாகாணத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 44,552 ஆகப் பதிவாகியுள்ளது.
இரண்டாவது அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அம்மாகாணத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 12,656 ஆகும்.
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவி வரும் இக்காலக்கட்டத்தில், 175 அதி அபாய வலயங்கள் உள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Source: https://samugammedia.com/severe-dengue-outbreak-in-sri-lanka-84091-people-affected-1785386836
