Home இலங்கை உடப்பில் கரையொதுங்கிய ஆணின் சடலம் – உடலில் சிங்களத்தில் இருந்த ‘டாட்டூ’

உடப்பில் கரையொதுங்கிய ஆணின் சடலம் – உடலில் சிங்களத்தில் இருந்த ‘டாட்டூ’

0
image

புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலை கடற்கரை வீதியூடாக சென்ற பொதுமக்கள் சடலத்தை அவதானித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலமாக அது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், உடலில் “மகே பன” என சிங்கள மொழியில் பச்சை பொறிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/the-body-of-the-man-who-melted-away-in-heat—a-tattoo-in-sinhala-on-the-body-1782110370

NO COMMENTS

Exit mobile version