Home இலங்கை ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

0
image

திருகோணமலை ,சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.இவர்கள் செல்வநகர்,கிளிவெட்டி பகுதிகளைச் சேர்ந்த 44,28 வயதுகளையுடையவர்களாவர்.

இரானுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படை பொலிஸாரும் இணைந்து இவ் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகம் நபர்கள் இருவரும் சேருநுவர பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/two-arrested-with-ice-drugs-1782144751

NO COMMENTS

Exit mobile version