Home இலங்கை கதிர்காம பாதயாத்திரையில் மேலும் ஒரு யாத்திரிகர் பலி

கதிர்காம பாதயாத்திரையில் மேலும் ஒரு யாத்திரிகர் பலி

0
image

கதிர்காம பாதயாத்திரையில் கலந்துகொண்டு பயணித்த மேலும் ஒரு யாத்திரிகர் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பாறை – பாணமை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் சடலத்தை பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டுக்கான கதிர்காம பாதயாத்திரையின் போது இடம்பெற்ற முதலாவது உயிரிழப்பு கடந்த 8ஆம் திகதி பொத்துவில் – குண்டுமடு பகுதியில் பதிவாகியிருந்தது.

அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்த யாத்திரிகர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/another-pilgrim-dies-during-the-kothirgam-pilgrimage-1783855982

NO COMMENTS

Exit mobile version