Home இலங்கை கிண்ணியா பிரதேச செயலகத்தில் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” சத்தியப்பிரமாணம்!

கிண்ணியா பிரதேச செயலகத்தில் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” சத்தியப்பிரமாணம்!

0
image

நேர்மையான அரச சேவையை உறுதிசெய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (27) நேர்மையான அரச சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை எடுத்துக்கொண்டனர்.

அரசாங்கத்தினால் 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் தொடக்கமாக, நிறுவன ரீதியாக நேர்மையை மேம்படுத்தும் சிறப்பு நாளாக இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எஸ். எம். கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு, அரச சேவையை மனசாட்சியுடனும் முழுமையான நேர்மையுடனும் நிறைவேற்றுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர், அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்களுக்குக் வெளிப்படைத்தன்மையுடன் சேவை ஆற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார்.

Source: https://samugammedia.com/oath-ceremony-of-integrity-culture—clean-sri-lanka-at-the-kinniya-district-secretariat-1785130225

NO COMMENTS

Exit mobile version